பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உ.பி.வாரியர்ஸ்

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – உ.பி.வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன .

டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி , முதலில் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 59ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணி சார்பில் டைட்டாஸ் சது, ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 139 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.