The poppy grower was trapped | அபின் செடி வளர்த்தவர் சிக்கினார்

அம்பாலா:ஹரியானாவில் வீட்டு தோட்டத்தில் அபின் பயிரிட்டவர் கைது செய்யப்பட்டார்.

இங்குள்ள, அம்பாலா மாவட்டம் லாஹா கிராமம் சர்வஜித் காலனியில் வசிக்கும் ஒருவர், தன் வீட்டு தோட்டத்தில் அபின் பயிரிட்டார்.

இதுகுறித்து, போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கு பயிரிட்டிருந்த அபின் செடிகளை வேரோடு பிடுங்கி அழித்தனர். அவற்றை பயிரிட்ட அந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.