Vishal: `சாப்பிடும் முன் கடவுளை வணங்குவது ஏன்?' -நடிகர் விஷால் விளக்கம்!

சமீப நாள்களாக நடிகர் விஷால், சாப்பிடுவதற்கு முன் மூன்று மதத்தின் கடவுள்களையும் வணங்கிவிட்டுச் சாப்பிடத் தொடங்குவது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

இதைப் பலரும் ட்ரோல் செய்து மீம்களைப் பதிவிட்டு வைரலாக்கினர். இதற்கான காரனம் குறித்து பேசியுள்ளார் நடிகர் விஷால்.

ஹரியின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஹரி, விஷால், சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

நடிகர் விஷாலின் வைரல் வீடியோ

இதில் ரசிகர்கள் நடிகர் விஷாலிடம் சில கேள்விகளைக் கேட்க விஷாலும் அதற்கு பதிலளித்திருந்தார். அதில் ஒருவர், ‘நீங்க சாப்பிடுவதற்கு முன் மூன்று மதங்களின் கடவுளையும் வணங்குவதற்கானக் காரணம் என்ன?’ என்று விஷாலிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷால், “நான் 10 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன். எனக்கு எல்லா மதங்களின் கடவுள்களும் ஒன்றுதான்.

இதுபற்றி என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். நான் பார்த்த முதல் கடவுள் கேமரா. அதுதான் எனக்கு சோறு போடுகிறது. அதற்கு முன் நான் எப்போதும் மூன்று மதங்களின் தெய்வங்களையும் வணங்குவேன். அதற்குப் பிறகு சாப்பிடும்போது வணங்குவேன்.

விஷால்

இதை நான் அரசியலுக்காகச் செய்யவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன். இப்போது ஒரு சிலர் அதை வீடியோ எடுத்து வைரலாக்கியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன் ” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.