கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பூர் மாவட்டத்துக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் இணைப்பாக உள்ள ஊர் கொழுமம். குமண மன்னன் ஆட்சி செய்த பூமி இது. இங்கே, அமராவதிஆற்றங்கரையோரத்தில் அழகுற அமைந்திருக்கிறது கோட்டை மாரியம்மன் கோயில். இங்கு அருளும் சுயம்பு மாரியம்மன், இரண்டரை அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறாள். லிங்கக்கல்லின் அடியில் ஆவுடையாரும் உள்ளது. அம்பாளுக்கு உரித்தான அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட அம்பாளாகவே பாவிக்கப்பட்டு புடவை கட்டி அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது. இத்தலத்தின் […]
The post கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.