அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் உத்தேசத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் உத்தேசத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தை நடiமுறைப்படுத்துவதற்கு, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட் முடிவுகள் பின்வருமாறு…

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நலன்புரி நன்மைகளைச் செலுத்தும் உத்தேச முறையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் உத்தேசத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்கள் 03 வருடங்களில் பொருளாதார, சமூக மற்றும் உளரீதியாக வலுவூட்டும் நோக்கில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 16,000 பயனாளிக் குடும்பங்களை இலக்காகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி நிதியனுசரணை மற்றும் உள்நாட்டு நிதிவசதி மூலம் முன்னோடிக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும், குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அடையாளங் காணப்பட்ட பயனாளிக் குடும்பங்களை வலுவூட்டுவதற்காக குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.