“CAA-வை ஆதரித்த அதிமுக-வுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் செல்லாது..!” – ஜி.ராமகிருஷ்ணன் உறுதி

“ஆரம்பத்தில் ஆரவாரத்துடன் தொடர் ஆலோசனை கூட்டமெல்லாம் நடத்திய `இந்தியா’ கூட்டணி, இப்போது அமைதி ஆகிவிட்டதே?!“

“`இந்தியா’ கூட்டணிக்குள் நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. எல்லாக் கட்சிகளும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கவில்லையே தவிர, பீகாரில் பொதுக் கூட்டமும், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், டெல்லி மற்றும் சண்டிகர் போன்ற மாநிலங்களில் கூட்டணி ஒப்பந்தங்கள் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்பே முடிந்துவிட்டது. தமிழ்நாட்டிலும் தொகுதி பங்கீடுகள் மிக விரைவிலேயே முடிவுபெறும். தொகுதி பங்கீடுகள் மொத்தமாக நிறைவுபெற்றபின் பல நிகழ்வுகளை `இந்தியா’ கூட்டணி நடத்த இருக்கின்றன. தேர்தலுக்கான கூட்டுப் பிரகடனத்தையும் வெளியிடுவோம்.. இதில் மிக முக்கியமான கொள்கை முடிவுகள் வர இருக்கின்றன. மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை பா.ஜ.க-வின் 10 ஆண்டு ஆட்சி கொடுத்திருப்பதால், `இந்தியா’ கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்!”

இந்தியா கூட்டணி

“தமிழ்நாட்டில் மாற்றுதிறனாளிகள் தொடங்கி, ஆசிரியர்கள், பரந்தூரில் விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் களமிறங்கி போராடுவதை சி.பி.எம் எப்படி பார்க்கிறது?”

“ஆசிரிய சங்கங்கள் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறார்கள், அவர்களை போலவே கோரிக்கை நிறைவேற்ற போராடும் போக்குவரத்து தொழிலாளர்களையும் அமைச்சர்கள் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தி உரிய காலத்தில் நிறைவேற்றி தருவோம் என்றுள்ளனர். மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை மிகுந்த அணுசரணையுடன் அணுகியிருக்க வேண்டும். பரந்தூர் பொறுத்தவரை விமான நிலையம் அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது். எனவே அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த வேண்டும். போராட்டம் நடத்தும் தரப்பினருக்கு மதிப்பளித்து அதனை பரிசீலிக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கு சி.பி.எம் வைக்கும் கோரிக்கை”

“தி.மு.க கூட்டணிக்கு மோடி எதிர்ப்பு வாக்குகள் கைகொடுத்த நிலையில், அதில் பங்குபோட வந்துவிட்டதே அ.தி.மு.க?”

எடப்பாடி பழனிசாமி

“பா,ஜ,க-வுடன் கூட்டணியில்லை என இப்போது அறிவித்திருக்கிறது அ.தி.மு.க. ஆனால் எடப்பாடி முதல்வராக இருந்தபோது பா.ஜ.க அரசின் திட்டங்களை அச்சு பிசுகாமல் அப்படியே ஆதரித்தார். மத ரீதியாக பிளப்படுத்தும் பா.ஜ.க-வின் கொள்கையை இதுவரை எதிர்த்ததாக தெரியவில்லை.. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தோம் அது தவறுதான் என்கிறார்களா… இல்லையே… பா.ஜ.க-வின் தனி மனிதர்களுடனான பிணக்குகளால் கூட்டணி முறிந்ததே அன்றி கொள்கைக்காக எடப்பாடி வெளியே வரவில்லை. அதனால் பா.ஜ.க-வுக்கு மாற்றாக அ.தி.மு.க-வை மக்கள் பார்க்க மாட்டார்கள். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க சிறுபான்மையினரின் வாக்குகள் செல்லாது”

’ ஜி. ராமகிருஷ்ணன்

“பிரதமர் வேட்பாளர் இல்லாத கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்கிறாரே வானதி சீனிவாசன். ?”

“2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வேட்பாளரை அறிவித்தார்களா.. மன்மோகன் சிங் பிரதமராக வருவார் என யாராவது எதிர்ப்பார்த்தார்களா… இல்லையே. பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதெல்லாம் ஒரு பின்னடைவே கிடையாது. எனவே வெற்றிக்கு பிறகு பிரதமர் யார் என்ற தேர்வு நடக்கும்”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.