Serial Update: “மீண்டும் கேமரா முன்னாடி நடிக்கிறது சந்தோஷமா இருக்கு!" – நெகிழும் திலகம்

80களில் வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்தவர் நடிகை திலகம். இவருடைய காதல் கணவர் ராஜசேகர். சமீபத்தில் இந்த தம்பதியின் சதாபிஷேக நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

குழந்தை இல்லாதது குறையெல்லாம் கிடையாது என அத்தனை அன்புடனும், காதலுடலுடன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள். அந்தப் பேட்டியில், `கலைஞனுக்கு ஓய்வு என்பது கிடையாது. சின்னத்திரை, வெள்ளித்திரை என எந்த வாய்ப்பு வந்தாலும் தயங்காம நடிப்பேன். அப்படி என்னைத் தேடி வருகிற வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்!’ எனவும் குறிப்பிட்டிருந்தார். 

ராஜசேகர் – திலகம்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சின்ன மருமகள்’ தொடரில் திலகம் நடித்துக் கொண்டிருக்கிறார். வயது என்பது வெறும் நம்பர் மட்டும் தான் என்பதை நிரூபித்தும் கொண்டிருக்கிறார். அந்த செட்டில் சக நடிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட ரீல்ஸ்கள் பலரையும் கொள்ளை கொண்டது. அவரிடம் இது தொடர்பாக பேசினோம்.

“இதற்கெல்லாம் முதலில் உங்களுக்குத்தான் நன்றி சொல்லி ஆகணும். நீங்க எடுத்த பேட்டியின் மூலமாகத்தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. கிட்டத்தட்ட நான்கு வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறேன். திடீர்னு ஒருநாள் ஃபோன் பண்ணி இந்தக் கேரக்டருக்காக கேட்டாங்க. சராசரியா எல்லோருடைய வீட்டிலும் இருக்கிற ஒரு பாட்டி தான் என் கதாபாத்திரம். நல்ல ஜாலியான டீம். எல்லாரும் ரொம்ப அன்பா பழகுறாங்க. OAK சுந்தர் கூட இதுதான் என் ஃபர்ஸ்ட் புராஜக்ட். மறுபடியும் கேமரா முன்னாடி நிற்குறது மனசுக்கு அவ்ளோ சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்குது!

திலகம் – ராஜசேகர்

இதைப் பார்த்துட்டு இன்னும் சில சீரியல்களில் இருந்து கூப்பிடுவாங்கன்னு நம்புறேன். வெள்ளத்தாய் என்கிற இந்தக் கேரக்டர் நிச்சயம் சின்ன மருமகள் தொடர் ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என உற்சாகம் பொங்கப் பேசினார் திலகம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.