A tiger cub that gave birth to 6 cubs | 6 குட்டிகளை ஈன்ற சிவிங்கிப்புலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

போபால் :மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும், காமினி என்ற பெண் சிவிங்கிப்புலி, ஐந்து குட்டிகள் ஈன்றதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது ஆறு குட்டிகள் என்பது தெரிய வந்துள்ளது.

நம் நாட்டில், சிவிங்கிப்புலி இனத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக, 2022

செப்டம்பரில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன.

இவற்றை ம.பி.,யின் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார். இதைத் தொடர்ந்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து, மேலும் 12 சிவிங்கிப்புலிகள், 2023 பிப்ரவரியில் கொண்டு வரப்பட்டன.

கடந்த ஆண்டு மார்ச்சில், ஜுவாலா என்ற பெண் சிவிங்கிப்புலி, நான்கு குட்டிகளை ஈன்றது. இதில் மூன்று குட்டிகள் உயிரிழந்தன. கடந்த ஜனவரியில், ஜுவாலா சிவிங்கிப்புலி மேலும் நான்கு குட்டிகளை ஈன்றது. இதைத் தொடர்ந்து, ஆஷா என்ற சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்றது.

குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும், காமினி என்ற பெண் சிவிங்கிப்புலி, கடந்த 10ம் தேதி, ஐந்து குட்டிகளை ஈன்றதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்

தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காமினி சிவிங்கிப்புலி ஆறு குட்டிகளை ஈன்றதாகவும், முன்பு வெளியிடப்பட்ட தகவல் திருத்தம் செய்யப்படுவதாகவும் அமைச்சர் பூபேந்திர யாதவ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.