‘கை’க்கு மாறியது மயிலாடுதுறை – தொகுதி மக்களுக்கு திமுக எம்.பி. உருக்கமான கடிதம்

கும்பகோணம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செ.ராமலிங்கம். இந்நிலையில், இந்த முறை திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து தற்போதைய எம்.பி. செ.ராமலிங்கம், வாக்காளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘வெற்றிகளால் அடக்கத்தையும், தோல்விகளால் ஊக்கத்தையும் பெறக்கூடியவர்களுக்கு வீழ்ச்சி என்பது எப்போதும் இல்லை’’ என கருணாநிதி கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், ‘‘நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.