இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முக்கிய வீரர் விலகல்… வங்காளதேச அணிக்கு பின்னடைவு

சிலெட்,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டிக்கான வங்காளதேச அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த வங்காளதேச அணியின் முக்கிய வீரரான முஷ்பிகுர் ரஹீம் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது வலது கட்டை விரலில் காயம் அடைந்த அவருக்கு எக்ஸ்ரே மேற்கொண்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குணமடைய 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இவரது விலகல் வங்காளதேச அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.