இன்று இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் நில நடுக்கம்

கிழக்கு ஜாவா இன்று ஏற்பட்ட இந்தோனேசியா சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிடர் அளவில் 6.0 ஆகப் பதிவாகி உள்ளது. இன்று காலை 11.22 மணிக்கு இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தோனேசியா நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியா பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட நாடாகும். இது பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.