ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது சிறைபிடித்து வருவதுடன், தமிழக மீனவர்களின் படகுககளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இந்திய அரசின் வலியுறுத்தலின் […]