மும்பை: நடைபயிற்சிக்கு வந்தபோது ஏற்பட்ட சண்டை; உயிரிழந்த நாய் – தடுக்க தவறிய உரிமையாளர் மீது வழக்கு

அடுக்கு மாடி குடியிருப்புகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாலை நேரங்கங்களில் அதனை நடைபயிற்சியின் போது அழைத்துச் செல்வது வழக்கம். அது போன்ற நேரங்களில் அந்த நாய்கள் அடுத்தவர்களை கடித்துவிட்டாலோ அல்லது அடுத்தவர்கள் வீடுகளில் அத்துமீறிவிட்டாலோ, அடுத்த நாயை கடித்துவிட்டாலோ சம்பந்தப்பட்ட நாய் உரிமையாளர் சிக்கலில் மாட்டிக்கொள்வதுண்டு. மும்பையில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

மும்பை அக்ரி பாடாவில் வசிப்பவர் தீப்தி ஜெயின். இவரிடம் ஒரு வளர்ப்பு நாய் இருக்கிறது. அவர் வசிக்கும் அதே கட்டடத்தில் வசிப்பவர் அபூர்வா மெஹ்ரா. இவரிடம் இரண்டு பெரிய வளர்ப்பு நாய்கள் இருக்கிறது. இரண்டு பேரும் தங்களது வளர்ப்பு நாய்களை கட்டடத்திற்கு கீழே இருக்கும் பகுதிக்கு நடைபயிற்சிக்காக கொண்டு வந்திருந்தனர்.

அபூர்வாவின் நாய்களை அவரது வீட்டு வேலைக்காரர்கள் அழைத்து வந்திருந்தனர். அபூர்வாவின் இரண்டு நாய்களும் தீப்தி ஜெயின் நாயை பார்த்ததும் அதனை தாக்க ஆரம்பித்தது. உடனே தங்களது நாயை காப்பாற்ற தீப்தி மகள் முயன்றார். ஆனால் அவரையும் தாக்கியது. இதில் தீப்தியின் வளர்ப்பு நாயும், அவரது மகளும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த தீப்தியின் நாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனது.

இதையடுத்து அபூர்வா மீதும், நாய்களை வெளியில் அழைத்து வந்தவர்கள் மீதும் தீப்தி போலீஸில் புகார் செய்தார். இது குறித்து தீப்தி கூறுகையில், ”அபூர்வாவிடம் இருக்கும் நாய் மத்திய அரசு தடை விதித்து இருக்கும் இத்தாலி ரக நாய் போன்று இருக்கிறது. இரு நாய்களும் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது குறித்து கட்டிட உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் செய்துள்ளனர். இதனால் இரு நாய்களும் கோவாவில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதனை இப்போது மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர்” என்று தீப்தி குற்றம் சாட்டினார்.

வழக்கு பதிவு

இது குறித்து அபூர்வா கூறுகையில்,” எங்களது நாய் இத்தாலி ரகத்தை சேர்ந்தது கிடையாது. இதற்கு முன்பு யாரையும் இது போன்று தாக்கியது கிடையாது. சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் நான் இல்லை. தீப்தியின் நாய் இறந்தது துரதிஷ்டவசமானது. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்”என்றார். தீப்தியின் புகாரை தொடர்ந்து அபூர்வா மற்றும் அவரது நாய்களை வெளியில் அழைத்துச்சென்ற இரண்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.