தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை நேற்று காலை பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள பட்டாளத்தம்மன் கோயிலில் வைத்து அறிவித்தார். அதனைத்தொடர்ந்து கெங்குவார்பட்டியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
டிடிவி தினகரன் அன்னஞ்சி விலக்கு பகுதியில் வீடு எடுத்து தங்கி தேர்தல் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தேனி, போடி, ஆண்டிபட்டி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசார பயணத்திட்டம் போடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு போடி, தேவாரம் பகுதிகளில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்களிக்கும்படி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேவாரத்தில் பிரசாரத்தை முடிக்கும் போது ஓபிஎஸ் மகனும் சிட்டிங் எம்.பியுமான ரவீந்திரநாத் டிடிவியின் பிரசார வேனில் ஏறினார். அப்போது 10 மணி நெருங்க இருந்த காரணத்தால் தேர்தல் விதிகளின் படி பிரசாரம் செய்யக்கூடாது என ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார்.
அப்போது பேசிய ரவீந்திரநாத், “தேனி மக்களவைத் தொகுதியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் நம்மைத் தேடி நம்மளை நாடி வந்திருக்கிறார். அவர் இங்கு போட்டியிடுவது காலத்தின் கட்டாயம். என்னை எப்படி கடந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற வைத்தீர்களோ அதே போல அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும்” என குக்கர் சின்னம் விளம்பர அட்டையை தூக்கி காட்டிவாறு சென்றார்.
இதைத்தொடர்ந்து கோம்பை, பண்ணைபுரம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் பிரசாரத்துக்கு வருவார் என தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த 3 இடங்களுக்கு வேனில் ரவீந்திரநாத் உடன் சென்று கையசைத்துவிட்டு முதல் நாள் பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY