ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தென்காசி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர். இருகட்சித் தலைவர்கள் நேரடி போட்டியால் எதிர்பார்ப்பு கூடியிருக்கும் தென்காசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளிலிருந்து யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டு சுயேட்சைகள், பா.ஜ.க. வேட்பாளர் ஜான் பாண்டியன் என மூன்றுபேர் மனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாய் வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஜான் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக ஜான் பாண்டியனின் மகன் வியங்கோ பாண்டியனும் மனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான ஆறுமுகசாமி (வயது 65) என்பவர் கோட் சூட் அணிந்து கௌபாய் கெட்டப்பில் வந்து சுயேச்சை வேட்பாளராக தனது மனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து புளியங்குடியை சேர்ந்த தன்னார்வலர், அறக்கட்டளை ஊழியர் கனகா சுயேச்சை வேட்பாளராக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் மனு தாக்கல் செய்தார்.
அரசியல் கட்சிகளின் பரபரப்புகளுக்கு நடுவே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆறுமுகசாமி, கௌபாய் கெட்டப்பில் வந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுயேட்சையாக மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY