'முதலில் பூத் ஏஜென்ட்களை போடுங்கள்' – பாஜக-வை கிண்டல் செய்த எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம், சூலூர் தொகுதியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சிங்கை ராமச்சந்திரன் ரூ.15 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டு மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க கூட்டணி கட்சி எம்.பி-யை கோவை நாடாளுமன்ற தொகுதியில் எங்கும் பார்க்க முடியவில்லை.

வேலுமணி

சிங்கை ராமச்சந்திரன் வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பார். சிங்கை ராமச்சந்திரனுக்கு நிகரான வேட்பாளர் கோவை நாடாளுமன்ற தொகுதியில் யாரும் கிடையாது.

அ.தி.மு.க-வுக்கு துரோகம் செய்து விட்டு ஓடிப்போன நபர் தி.மு.க-வில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வெறும் 4% ஓட்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு அண்ணாமலை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். களத்தில் இல்லாத அண்ணாமலை அ.தி.மு.க-வுக்கு போட்டியில்லை.

அண்ணாமலை

அதனால் அவர் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க-வுடன் போட்டியிட முதலில் அனைத்து பூத்களிலும் பா.ஜ.க ஏஜென்ட்களை நியமிக்க வேண்டும். கோவையில் சிங்கை ராமச்சந்திரன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.” என்றார்.

கோவை அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசும்போது, “அ.தி.மு.க-வில் மேயர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துவிட்டு, எதிரிகளுடன் கைகோர்த்த துரோகியை கோவை மண்ணில் வெற்றி பெற செய்யவிடக் கூடாது.

சிங்கை ராமச்சந்திரன்

மேலும் அ.தி.மு.க-வைப் பயன்படுத்தி 4 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றுவிட்டு, அ.தி.மு.க-வின் முன்னணி தலைவர்களை விமர்சித்து முதுகில் குத்திய அண்ணாமலையையும் வெற்றி பெறவிடக் கூடாது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.