நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ் செல்வனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி ஊட்டியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ” தி.மு.க ஆட்சியில் தமிழகம் முழுவதும் போதை பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. அதனை இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் போதை பொருட்களை விற்பனை செய்வதே தி.மு.க நிர்வாகிகள் தான். போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க வைச் சேர்ந்த இன்னும் பலர் கைதாக இருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் மக்களுக்காக செய்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிக்க முடியாத தி.மு.க வினர் , எங்களைப் பற்றி குறை கூறியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊழல் செய்ததாக இந்த நாட்டில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தி.மு.க வில் இருந்து ஒவ்வொருவராக சிறைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். நீலகிரியில் தி.மு.க சார்பில் போட்டியிடக் கூடிய ஆ. ராசா ஊழல் குறித்து உலகமே அறியும். கண்ணுக்கே தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க தான். 2 ஜி விவகாரத்தில் ஆ. ராசா மீது மீண்டும் விசாரணை நடைபெற இருக்கிறது. அதற்கு பிறகு அவர் எங்கே போவார் என்று யாருக்கும் தெரியாது. எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் ” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY