“பாஜக தமிழ்நாட்டை நன்றாக குறிவைக்கட்டும்; ஆனால்..!" – கச்சத்தீவு வழக்குகள் குறித்து அதிமுக

அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கச்சத்தீவு குறித்து தி.மு.க.வும், பிரதமர் மோடியும் பேசி வருகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான். மீனவர்கள் இவ்வளவு அல்லல்படுவதற்கு காரணம் தி.மு க அரசு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க முதன் முதகாக வழக்குத்தொடர்ந்தது  அ.தி.மு.க-தான். 2008-ம் ஆண்டு மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எதிர்மனு தாக்கல் செய்த அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமில்லை, இலங்கைக்குத்தான் சொந்தம் என்று கூறியது.

செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம்

அதற்கு ஆதரவாக தி.மு.க. அரசும் மனு தாக்கல் செய்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதற்காக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மத்திய காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து பலமுறை கடிதங்களை எழுதி உள்ளார். ஜெயலலிதா எம்.பி-யாக இருக்கும்போது நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்துள்ளார். 2013-க்கு பிறகு இன்றுவரை இப்போது இருக்கும் மத்திய அரசு இந்த வழக்கு சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கச்சத்தீவு குறித்து பேச தி.மு.க-வுக்கோ, காங்கிரஸுக்கோ, பா.ஜ.க-வுக்கோ வேறு எந்த கட்சிக்கும் உரிமை இல்லை. கச்சத்தீவை மீட்க அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை ஆதாரத்துடன் பேச வேண்டும்.

கச்சத்தீவை மீட்க அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. 2008-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு 2013-ம் ஆண்டுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போதைய அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் வழக்கை துரிதமாக முடிக்கக்கேட்டு பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கச்சத்தீவை மீட்பது தொடர்பாக எந்த கட்சியாவது வழக்கு தொடர்ந்து உள்ளதா?. கச்சத்தீவை மீட்போம் என்று மீனவர்களை ஏமாற்றக்கூடாது.

கச்சத்தீவு வழக்கு குறித்த ஆதாரங்களை காண்பித்த தளவாய் சுந்தரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கச்சத்தீவைப்பற்றி பேச உரிமை இல்லை. அவர்கள் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து ஆதாரம் இருந்தால் அதை வெளியிட்டு பேச வேண்டும். எங்களிடம் அதற்கான முழு ஆதாரங்களும் உள்ளது. பத்து ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் கிடக்கிறது. அட்டார்னி ஜெனரலை பார்த்து வழக்கை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி நாங்கள் மனு அளித்தும் பயனில்லை. காங்கிரஸும், பா.ஜ.க-வும் இந்த வழக்கில் அமைதியாக இருக்கிறது. பா.ஜ.க தமிழ்நாட்டை நன்றாக குறிவைக்கட்டும், ஆனால் கச்சத்தீவு பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.  கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க-வுக்கு மீனவர் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.