நாமக்கல்: மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போலி மதுபான ஆலை – திமுக பிரமுகருக்கு தொடர்பா?!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் திருச்செங்கோடு திமுக ஒன்றியச் துணைச் செயலாளர் மேனகா கார்த்தி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.

இங்கு போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீஸார் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஐந்து பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. மேலும் 5,400 லிட்டர் ஸ்பிரிட், போலி லேபில்கள் மற்றும் காலி மது பாட்டில்கள், மூடிகள், வெண்ணிலா சுவையூட்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில், தொடர்புடையவர்கள் யார்? எதற்காக எங்கிருந்து கொண்டு வர பட்டது என்பது குறித்து டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 13 அரசு மதுபான கடைகளில் இரவு விற்பனைக்காக இந்த மது பாட்டில்கள் தயாரித்துக் கொண்டு செல்லப்படுவதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்தது. வட்டூர் பெத்தாம் பட்டி பகுதியை சேர்ந்த 6002 என்ற எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையில் பார் நடத்தி வருபவர், மற்றும் விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மற்றும் முரளி ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட் ஐம்பது லிட்டர் மற்றும் 35 லிட்டர் கேன்களில் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்து இரவு நேர விற்பனைகளுக்கு மதுபான கடைகளுக்கு கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

இதற்கு பயன்படுத்திய ஆல்கஹால் மீட்டர், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் என வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரண்டு சக்கர வாகனம், (Eicher van ) மினி லாரி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ்(எ) மாதேஸ்வரன் திருச்செங்கோடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் உள்ள இந்த குடோனை வாடகைக்கு எடுத்து ஒன்றிய பகுதிகளில் உள்ள 13 மதுபான கடைகளுக்கு இரவு நேர விற்பனைக்காக விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்த போலீஸார், மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார்? மேலும் இவர்களுக்கு இடம் கொடுத்து திமுக ஒன்றியச் துணைச் செயலாளர் உதவினாரா? என்கிற விசாரணை சென்றுக்கொண்டிருக்கிறது. என்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை காவல் நிலைய ஆய்வாளர் சுல்தான் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய பிரமுகர்கள் ஒன்றிய பகுதியில் பிடிபடுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கி வந்தது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.