`எடப்பாடியைப் பார்க்க யாரும் தயாராக இல்லை!' – சொல்கிறார் அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கருத்து சொல்ல முடியாத இ.பி.எஸ், திராட்சை பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் எனச் சொல்கிறார்.

அண்ணாமலை

இ.பி.எஸ் ரோடு ஷோ போனால் எவ்வளவு பேர் வருவார்கள். அவரைப் பார்க்க யாரும் தயாராக இல்லை. ரோடு ஷோ போனால் அவரைப் பார்க்க மக்கள் வரமாட்டார்கள். அதனால் மக்களை அழைத்து சென்று பட்டியில் அடைத்துவைத்து, எழுதி வைத்து படிப்பதை கேட்க வைக்கிறார்கள்.

டி.ஆர்.பி.ராஜாவின் அப்பா சமூக விரோதி. சாராயம் விற்று வருகிறார். நூற்றுக்கணக்கான நண்பர்களை குடிக்க வைத்து கொன்றவர்கள். எங்களை சமூக விரோதிகள் என்பது நகைச்சுவையின் உச்சம். கோபாலபுரத்தின் ஊழல் குடும்பம் 2024 தேர்தலுக்கு பின் சிறையில் இருப்பார்கள் என மோடி கியாரன்ட்டி கொடுப்பார்.

ஸ்டாலின்

ஸ்டாலின் கொடுக்கும் கியாரன்ட்டி உப்பு சப்பு இல்லாததது. சமூக வலைதளங்களில் சபரீசன் நிறுவனம் ரூ.7.33 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்துள்ளது. பா.ஜ.க மீது போலியான கட்டமைப்பை வைத்துள்ளனர். அந்த பிம்பங்கள் எல்லாம் தேர்தலுக்கு பிறகு உடையும். உதயநிதி ஒரு குழந்தைக்கு ‘ரோலக்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளார்.

2024-ம் ஆண்டுக்கு பிறகு அதிகாரிகள் எத்தனை பேர் சிறைக்கு செல்கிறார்கள் என பாருங்கள். தி.மு.க ஆட்சி நிரந்தரமாக இருக்க போவதில்லை. தி.மு.க-வுக்கு எதிராக நான் அரசியல் தைரியமாக செய்து வருகிறேன். முதல்வர் ஆசை எனக்கில்லை. அரசியலை நேர்மையாக செய்ய விரும்புகிறேன். ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத நபர் மு.க.ஸ்டாலின்.

கோவை

பா.ஜ.க 400 தொகுதிகளில் வெற்றி பெறாது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் விவாதம். தமிழ்நாட்டில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும். கோவையில் பண அரசியல் என்ற பேயை மக்கள் ஓட்ட வேப்பிலை உடன் காத்திருக்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது.” என்றார். `தாலிக்கு தங்கம் திட்டம்’ – திமுக அரசு நிறுத்தியதா? அதிமுக குற்றசாட்டும் திமுக பதிலும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.