ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல்: தமிழக முதல்வர் கண்டனம்

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ‘ரோடு ஷோ’ சென்ற அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பூக்களுடன் கற்களைக்கொண்டு மர்மநபர்கள் எரிந்திருக்கிறார்கள். நெற்றியில் காயம் ஏற்பட்ட ஜெகன்மோகன் ரெட்டிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் மீதான தாக்குதலுக்குத் தமிழ்நாடு முதல்வர் கண்டனம்

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவத்துக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது, நாகரிகம், பரஸ்பர மரியாதையையும் நிலை நாட்டுவோம்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.