ஆவடி: துப்பாக்கிமுனையில் நகைக்கடையில் கொள்ளை… பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ஐ.ஏ.எஃப் ரோடு, எல்லையம்மன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் இன்று மதியம் (15.4.2024) கடையில் தனியாக இருந்தார். அப்போது மூப்பது வயது மதிக்கத்தக்க நான்கு பேர் பிரகாஷின் நகைக்கடைக்கு வந்தனர். அவர்கள் நகைகளை வாங்குவதுபோல பிரகாஷிடம் பேச்சுக் கொடுத்தனர். இந்த சமயத்தில் திடீரென நான்கு பேரில் இரண்டு பேர் பிரகாஷை துப்பாக்கிமுனையில் மிரட்டி, அவரை கட்டிப் போட்டனர். பின்னர் நகைக்கடையிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், 5 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளயைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

கொள்ளை நடந்த நகைக்கடை

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த முத்தாபுதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையின் ஓனர் பிரகாஷிடம் விசாரித்து வருகின்றனர். கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி பதிவுகள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி-க்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம், ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.