சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேட்பாளர் வாகனத்தை முறையாக பரிசோதனை செய்யாததால், நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை பொறுப்பாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாகவும், மாநில தலைமை தேர்தல் ஆணைர் சாகு தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 […]