ஸ்ரீவள்ளி 2.0 ஆக என்னை பார்ப்பீர்கள் : ராஷ்மிகா நம்பிக்கை

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் புஷ்பா. இதன் முதல் பாகம் புஷ்பா : தி ரைஸ் என்கிற பெயரில் வெளியானது. இரண்டாம் பாகம் தற்போது புஷ்பா : தி ரூல் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

முதல் பாகத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளது குறித்து சமீபத்தில் ராஷ்மிகா கூறும்போது, “முதல் பாகத்தில் நான் நடிக்கும்போது இதன் கதை, என் கதாபாத்திரம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல் தான் தயாரானேன். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஸ்ரீ வள்ளி யார் என முழுமையாக புரிந்து கொண்டு நடித்து இருக்கிறேன். இந்த படம் வெளியாகும்போது இதில் என்னை ஸ்ரீவள்ளி 2.0 ஆக பார்க்கலாம்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.