“திரைத்துறைதான்… ஷங்கரின் உதவி இயக்குநர் இல்லை!" – மகள், மருமகனுடன் ஷங்கர் அளித்த பிரஸ்மீட்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நேற்று (15.04.2024) சென்னை ஈசிஆர் சாலை நீலங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே.கன்வென்ஷனல் ஹாலில் திருமணம் நடந்தது. இத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், கமல், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், ராம் சரண், சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து, மணிரத்னம், அட்லீ ஆகியோர் குடும்பத்துடன் இத்திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஷங்கர் விட்டுத் திருமண விழா

இந்நிலையில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, ஷங்கர், புது மணத் தம்பதிகள் மற்றும் இருவரின் குடும்பத்தினரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதில் பேசிய இயக்குநர் ஷங்கர், “திருமணத்திற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்த வேண்டும்” என்று நெகிச்சியாகப் பேசினார். இதையடுத்துப் பேசிய தருண் கார்த்திகேயன், ” நான் ஷங்கர் அங்கிளின் அசிஸ்டண்ட் இல்லை. அப்பா அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். அதனால், நானும் ஐடி படித்திருக்கிறேன். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து பேசிய தருண் கார்த்திகேயனின் தந்தை, “ஐஸ்வர்யா – தருண் இருவருக்கும் நல்லபடியாக நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தருண், ஷங்கரிடம் உதவிய இயக்குநராகப் பணியாற்றவில்லை. ‘ரத்னம்’ படத்தில் ஹரியிடம்தான் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் ஹரி என்னுடைய நெருங்கிய நண்பர்.

இயக்குநர் ஹரி

என் மகன் அமெரிக்காவில் வளர்ந்தவர், ஐடி இன்ஜினியரிங் படித்திருக்கிறார். திரைத்துறையில் பணியாற்ற அவருக்கு ஆசை. அதனால், இந்தியா வந்தார்.” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.