சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று காவல்துறையினர், துணைராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர். பதற்றமான வாக்குச்சாடிகள் அமைந்துள்ள பகுதிகளில் மட்டும் நாளையும் கொடி அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதையடுத்து, பாதுகாப்பான முறையில் தோ்தலை நடத்துவதற்கு தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தோ்தல் […]