Dhoni: “தோனியைவிட தினேஷ் கார்த்திக்கிடம் இதைச் செய்வது எளிது"- தோனி குறித்து ரோஹித் சர்மா

டி 20 உலக்கோப்பைத் தொடரில் தோனியை விளையாட அழைப்பது குறித்து ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.

மே 26ஆம் தேதியுடன் ஐபிஎல் 17ஆவது சீசன் நிறைவுபெற்ற உடன், ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இருக்கிறது. இதற்கான, இந்திய அணியைத் தேர்வு செய்யும் பணியும்  நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கில்கிறிஸ்ட் மற்றும் வாஹன் இணைந்து நடத்தி வரும் பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரோஹித் சர்மா, ‘Impact Player’ விதிமுறை, ரிஷப் பந்த், என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்த அவர் டி 20 உலக்கோப்பைத் தொடரில்  இந்திய அணியில் தோனி இடம்பெறுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

ரோஹித் சர்மா, தோனி

இது தொடர்பாக பேசிய அவர், “ மும்பைக்கு எதிரான போட்டியில் 4 பந்துகள் மட்டுமே இருந்தபோது தோனி களத்திற்குள் வந்தார். ஆனால் 4 பந்துகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். அவர் ஆடிய ஆட்டம் வித்தியாசமாக இருந்தது.  தற்போதைய சீசனில் தோனி, தினேஷ் கார்த்திக் இருவரும் பேட்டிங் செய்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. 

டி20 உலகக் கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட அழைப்பது மிகவும் கடினமான ஒன்று என்று நினைக்கிறேன். அவர் சோர்வாக உள்ளார். எனினும் தோனி வெஸ்ட் இண்டீஸ் வருவாரா என்பது தெரியாது. ஆனால் நிச்சயம் அமெரிக்கா வருவார் என்று நினைக்கிறேன்.

தோனி

ஏனெனில், அண்மை காலங்களில் அதிகமாக கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமாக உள்ளார். அதனால் அமெரிக்கா வருவார் என்று நினைக்கிறேன். தோனியை சமாதானப்படுத்துவதை விடவும் தினேஷ் கார்த்திக்கை சமாதானம் செய்வது எளிது” என்று நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.