தருமபுரி: 81.48 சதவிகிதம் வாக்குப் பதிவு… வேட்பாளர்கள் முன்பு சீலிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு!

ருமபுரி மக்களவைத் தொகுதியில் சின்னச்சின்ன சலசலப்புகள் இருந்தபோதும்… அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதத்தில் தருமபுரி தொகுதி தான் முதலிடத்தையும் பிடித்திருக்கிறது. அதிகபட்சமாக இந்தத் தொகுதியில் 81.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்றத் தொகுதிக்குள் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,24,896.

வாக்கு எண்ணும் மையம்

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 1,805 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பதட்டமாக காணப்பட்ட 262 வாக்குச் சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சில இடங்களை தவிர மற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கே வாக்குப் பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கின. நடுநடுவே ஏற்பட்ட பிரச்னைகளை காவல்துறையினரும், தேர்தல் அலுவலர்களும் சுமூகமாகக் கையாண்டனர்.

வெயில் காரணமாக மதிய வேளையில் வாக்குப் பதிவு மந்தமானது. வெயில் தணிந்த பிறகு மீண்டும் வாக்களிக்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனர். முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மிக ஆர்வமாக வந்து ஜனநாயகக் கடமை ஆற்றினர்.

வேட்பாளர்கள் முன்பு ‘சீல்’ வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையம்.

காலை 9 மணி நிலவரப்படி 14.74 சதவிகித மக்கள் வாக்களித்திருந்தனர். நண்பகல் 11 மணி நிலவரப்படி 29.24 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. மதியம் 1 மணி நிலவரப்படி 46.09 சதவிகித வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 58.87 சதவிகித மக்கள் வாக்களித்திருந்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 73.51 சதவிகிதமாக உயர்ந்தது. இறுதியாக, மாலை 6 மணி நிலவரப்படி 81.41 சதவிகிதமாக உச்சம் தொட்டது. அதாவது, ஆண்கள் – 6,24,256 பேர், பெண்கள் – 6,17,033 பேர், மூன்றாம் பாலினத்தவர் – 88 பேர் என மொத்தமாக 12,41,377 பேர் வாக்களித்திருக்கின்றனர்.

இதையடுத்து, வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு தருமபுரி அடுத்த செட்டிக்கரை அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்திலுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குப் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிட்டு நான்கு அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.