Vetrimaaran: “வெற்றிமாறன் சார் கூறிய கதையைக் கேட்டு பிரமித்துப் போனேன்"- ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் ‘அதிகாரம்’ படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் வெற்றி மாறன் தற்போது விடுதலை 2- ம் பாகத்தை இலக்கை வருகிறார். தவிர சூரியின் கருடன் படத்துக்குக் கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய படத்துக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி இருக்கிறார். இப்படத்தை செந்தில் குமார் இயக்குகிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இதுகுறித்து  ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், “ வெற்றிமாறன் சார் கூறிய ‘அதிகாரம்’ படத்தின் திரைக்கதையைக் கேட்டு பிரமித்துப் போனேன். அவர் எழுதியுள்ள  இந்த பிரமாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அருமையான கதையை எனக்குக் கொடுத்த வெற்றிமாறனுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் நன்றி. அனைவரது ஆசிர்வாதமும் வேண்டும்” என பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் ‘ஹண்டர்’ படத்தின் அறிவிப்பும் வெளியானது.

ராகவா லாரன்ஸ்

பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்குப் பிறகு இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் ஆகிய இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.