கிளிநொச்சி  மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து வருகின்றமையால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளது. 

தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான நிலைமை காரணமாக பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நாளாந்தம்  அதிக நீரை சுத்திகரித்து வழங்க வேண்டிய நிலைமை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு அதிகரித்துச் செல்லும்  அளவுக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. 

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு கொள்ளளவை  விட அதிக நீர் பாவைனயும் தேவையும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தினமும் தேவையான அளவு நீரை பொது மக்களுக்கு வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

எனவே, பொதுமக்கள் இந் நிலைமையினை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

இந்நிலைமை  தொடர்ந்தும் காணப்படுமாயின் வரும் நாட்களில் நீர் விநியோக நடவடிக்கைகள் சுழற்சி முறையில் வழங்கும் நிலைமை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.