தார் கலவையில் எஃகு நார்கள் சேர்த்து பள்ளத்தை தானே சரிசெய்யும் சாலைகள் அமைக்க திட்டம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிக்க புரட்சிகர தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு வருகிறது. நெடுஞ்சாலையில் பள்ளம், குழி ஏற்பட்டால், அவற்றை தானாக சரி செய்துகொள்ளும் வகையில் புதிய தார்கலவை பயன்படுத்தப்பட உள்ளது.

இதில் எஃகு நார்கள் இருக்கும். சாலையில் பள்ளம் ஏற்பட்டவுடன் தார் கலவை மற்றும் எஃகு நார்கள் தானாக நெகிழ்ந்து பள்ளத்தை அடைத்துவிடும்.

ஆனால் எஃகு நார்கள் சேர்க்கப்பட்ட தார்கலவை, எவ்வளவு காலத்துக்கு தானாக பழுதுபார்க்கும் பணியை தொடரும் என தெரியவில்லை. இந்த புதிய திட்டத்துக்கு செலவு குறைவாக இருக்குமா என்பதை ஆராய்ந்து, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.

சாலைகளின் உறுதி தன்மையை மேம்படுத்த உள்நாட்டு மற்றும் புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய தொழில்நுட்பம் சாலை களின் ஆயுளை அதிகரித்து போக்குவரத்து இடையூறை குறைக்கும் என்பதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக் கையுடன் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.