திருமணத்துக்குமுன் கர்ப்பம்; பிறந்த குழந்தையை 5வது மாடியில் இருந்து வீசிய தாய் – கேரளாவில் அதிர்ச்சி

கேரள மாநிலம் கொச்சியின் பனம்பிள்ளி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 23 வயது இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு திருச்சூரில் உள்ள தனது சமூக வலைதள ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அவர்களுக்குள் ஏற்பட்ட இந்த நெருக்கத்தால், இந்த பெண் கர்ப்பம் தரித்திருக்கிறார். எனவே பெண் தனது  குடும்பத்திற்கு தெரியாமல் தன் கர்ப்பத்தை மறைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்பெண் தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது குளியலறையில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.

தனக்கு திருமணமாகாத நிலையில் குழந்தையை பெற்றெடுத்ததால், தனது குடும்பத்திற்கு பயந்த பெண் பெற்றோர்களிடம் இருந்து குழந்தையை மறைக்க முயன்றிருக்கிறார். இதனால் குழந்தையே ரகசியமாக கொல்ல முயன்றவர், புதிதாகப் பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் குழந்தையின் சடலத்தை பிளாஸ்டி பையில் சுற்றி தனது வீட்டில் ஐந்தாவது மாடியின் ஜன்னல் வழியாக குழந்தையின் சடலத்தை சாலையில் தூக்கி எரிந்திருக்கிறார்.

இதையடுத்து அந்த வழியாக சென்ற நகர துப்புரவு பணியாளர்கள் சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பையினை குப்பை என நினைத்து அப்புறப்படுத்த முயன்றிருக்கிறார். அப்போது பிளாஸ்டிக் பைக்குள் புதிதாக பிறந்த ஆண் குழந்தையின் சடலம் கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அந்த குடியிருப்பு பகுதிகளில் விசாரணையை தொடங்கினர். அப்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ரத்தக் கறை படிந்திருப்பதைக் கண்டறிந்த போலீஸார், அந்த வீட்டில் உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த இளம் பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குழந்தை

மேலும் குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது ஐபிசி பிரிவு 302 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பெண் சிகிச்சைக்காக எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை முன்னேற்றம் அடைந்த பிறகு இவரையும் இவரது ஆண்  நண்பரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு செய்யப்பட்ட முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவுகளில், இறப்புக்கான காரணம் மண்டை ஓட்டில் ஏற்பட்ட காயம் என்றும், கீழ் தாடையில் கூடுதல் காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     இதைத்தொடர்ந்து, `குழந்தைகளைப் பாதுகாக்க முடியாவிட்டால், குழந்தைகளைக் கொல்வது போன்ற கொடுமைகளை யாரும் செய்யக் கூடாது என்றும், குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் இருக்கின்றன. அங்கு அவர்கள் பாதுகாப்பாக வளர்வார்கள்’ என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் கே.வி.மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.