"12 வயது சிறுவன்தான் என் இன்ஸ்பிரேஷன்!" – கடலோர இடங்களைச் சுத்தம் செய்யும் ரெஜினா கஸான்ட்ரா

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மூலம் தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியவர் ரெஜினா கஸான்ட்ரா. சமீபத்திய அவரது ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, ‘ஃபார்சி’, ‘ராக்கெட் பாய்ஸ்’ ஆகியவற்றில் ரெஜினாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது. அடுத்தும் அசத்தலான லைன் அப்களை கைவசம் வைத்துள்ளார். அஜித்துடன் ‘விடாமுயற்சி’, பிரபுதேவாவுடன் ‘ஃப்ளாஷ்பேக்’, அருண் விஜய்யுடன் ‘பார்டர்’ தவிர தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ரெஜினா

இதில் ‘ஃப்ளாஷ் பேக்’ மற்றும் ‘பார்டர்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டன. அஜித்துடன் நடித்து வரும் ‘விடா முயற்சி’க்காக அஜர்பைஜான் ஷெட்யூலிலும் பங்கேற்றுத் திரும்பினார்.

நடிப்புடன் கடலில் சர்ஃப்பிங் செய்யும் சாகச விளையாட்டிலும் ஆர்வமுள்ள ரெஜினா, கடல் மற்றும் கடலோர இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று ‘Earth Day’யில் கூட சென்னைக் கடற்கரைகளில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் தற்போது சப் மெரினா கிளப்புடன் இணைந்து பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ரெஜினா கஸான்ட்ரா

இது குறித்து ரெஜினா பேசியதாவது, “கடற்கரை மற்றும் நீர்நிலைகளின் அவசியம் நமக்குத் தெரியும். அதனைத் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. நீர்நிலைகளைக் குப்பை கிடங்காக மாற்றிவிடக் கூடாது. நம் சுற்றுச்சூழலிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். இப்போதைய சூழலில் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்காகவே இதுபோன்ற பணிகளை ஆர்வமாக செய்து வருகிறேன். அனிஷ் என்ற 12 வயது சிறுவன், சப் (sup) மெரினா கிளப் என்ற குழுவையே வழி நடத்திவருகிறார். அனிஷைப் பார்த்தே அந்த டீமில் நானும் இணைந்து சமுக முன்னெடுப்பு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.