தாமரைக்கு வாக்களிப்பேன் என்று கூறிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த காங். வேட்பாளர்

ஹைதராபாத்: தெலங்கானாவில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கப் போவதாக கூறிய பெண் தொழிலாளியை காங். வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் நிர்வாகி டி.ஜீவன் ரெட்டி. இவர் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளாராக போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்குட்பட்ட ஆர்மூர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் இவர் சென்று ‘கை’ சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது ஒரு பெண், “நான் தாமரை சின்னத்தில் தான் வாக்களிப்பேன்” என்று தைரியமாக கூறியுள்ளார். இதனை கேட்டு ஜீவன் ரெட்டி அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். உடனே அவர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். அந்தப் பெண் சமீபத்தில் நடந்த தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாகவும் எனினும் அவருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படவில்லை என்றும் ஜீவன் ரெட்டியிடம் புகார் கூறியதாகத் தெரிகிறது.

எனினும் மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என்று கூறிய பெண்ணை வேட்பாளர் ஒருவர் பலர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.