Ruturaj Gaikwad: `காலைல வரைக்கும் யார் ஆடப்போறாங்கனு தெரியாம இருந்துச்சு!' – விவரிக்கும் ருத்துராஜ்

தரம்சாலாவில் பஞ்சாபுக்கு ஏதிராக நடந்த போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் போட்டி குறித்து பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

குறிப்பாக, வீரர்களுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்களால் போட்டியன்று என்ன மாதிரியான பதற்றமான சூழலில் அவர் இருந்தார் என்பதைப் பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.

ருத்துராஜ் கெய்க்வாட் பேசியதாவது, ‘எல்லாருமே இந்த விக்கெட் ஸ்லோவாகத்தான் இருக்கிறது என நம்பினோம். எங்களுக்குக் கிடைத்த தொடக்கத்திற்கு 180 ரன்களை கடந்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால், அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்தோம். அதனால் வேகம் கொஞ்சம் குறைந்தது. ஒரு 10 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். ஆனால், இந்த பிட்ச்சில் இதுவே வெற்றிக்கான ஸ்கோராகத்தான் இருந்தது.

சிமர்ஜித் சிங் எப்படி இவ்வளவு வேகமாக வீசுகிறார் என தெரியவில்லை. சீசனுக்கு முந்தைய பயிற்சி முகாமிலேயே அவர் 150 கி.மீ வேகத்தில் வீசிக்கொண்டிருந்தார். பதிரனா, முஷ்டபிஜூர், ஷர்துல், தீபக் சஹார் போன்றோர் இருந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எதையுமே தாமதமாக கருதக்கூடாது என நினைக்கிறேன். இன்றைக்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.

பேட்டிங்கில் தடுமாறியபோது இம்பாக்ட் ப்ளேயராக ஒரு பேட்டரை இறக்கலாம் என நினைத்தோம். அந்த பேட்டரால் ஒரு 10-15 ரன்கள் கூடுதலாக கிடைக்கலாம். ஆனால், சிமர்ஜித் சிங்கால் 2-3 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க முடியும் என நம்பினோம். பதிரனா ஆட முடியாது என்பது நேற்று இரவுதான் தெரியும். சில வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இன்றைக்கு காலை வரைக்குமே எந்தெந்த வீரர்கள் ஆடப்போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாமல்தான் இருந்தது. அப்படியிருந்து இந்தப் போட்டியை வென்றதில் மகிழ்ச்சி.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.