சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 120 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2024 மே மாதம் 04 ஆம் திகதி மாலை கல்பிட்டி உச்சமுனை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் நூற்று இருபது (120) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் 2024 மே மாதம் 4 ஆம் திகதி மாலை கல்பிட்டி, உச்சமுனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த நான்கு (04) பைகளில் சுமார் 120 கிலோ கிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) இவ்வாறு கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.