தூத்துக்குடி: மதுபோதை… வாய்த்தகராறு – பீர் பாட்டிலால் குத்திக் கொலைசெய்யப்பட்ட ஃபைனான்சியர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகரைச்  சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராகவும் ஃபைனான்சியராகவும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வீரவாஞ்சிநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு இருட்டில் கிடந்துள்ளார்.

கோவில்பட்டி

அவ்வழியே சென்றவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறினர். சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கும் பாரதிநகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில் உள்ள தனது தாய் மாரியம்மாளின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு வந்த அவரது நண்பர்கள் சிலர், முத்துப்பாண்டியிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். அதன் பின்னர் அதே நண்பர்களுடன் வீரவாஞ்சி நகரில் உள்ள மைதானத்தில் மரத்தடியில் அமர்ந்து  முத்துப்பாண்டியும் நண்பர்களும் மது அருந்தியுள்ளனர்.  அப்போது அங்கு திடீரென வந்த மணிகண்டனுக்கும் முத்துப்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கொலை நடந்த மைதானம்

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் பீர் பாட்டிலை உடைத்து முத்துப்பாண்டியின் கழுத்தில் சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.  கொலைச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தடயங்களை கைப்பற்றி மணிகண்டனைத் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.