நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பல மீட்டர் தூரம் ஒரு கார் பறந்து வந்து விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
2 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், நடிகர் நாகர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் பல மீட்டர் உயரத்தில் ஒரு கார் பறந்து வந்து விழுந்தது. இதனை விபத்து என சிலர் எண்ணிய நிலையில் திரைப்பட படப்பிடிப்பு என தெரியவந்தது.