பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த 8 ஆண்டு காலத்தில் மோடி கொண்டு வந்த திட்டங்களான டிஜிட்டல் இந்தியா – பெண் கல்வி – தூய்மை இந்தியா ஆகியவற்றுக்கெல்லாம் ஆதரவு குரல்கள் பல எழுந்தது. அது ஒருபக்கம் என்றால், இந்த இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் தொடங்கி கலவரங்கள் வரை பல விஷயங்கள் அதிகரித்ததாக கூறி மோடி ஆட்சிக்கு ஏராளமான எதிர்ப்பு குரல்களும் பதிவாகின.
அந்தவகையில் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி, இந்தியாவை வளர்க்க உதவியதாக பாஜக-வின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும், டாலர் மதிப்பு சரிவு தொடங்கி கலவரங்கள் வரை இந்த ஆட்சி மீது விமர்சனங்கள் பல வைத்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியனும் புதிய தலைமுறையில் தங்களின் சில கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார். அந்த பேட்டியின் முழு காணொளி இங்கே:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM