ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வந்த T20 உலகக்கோப்பை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
மொத்தம் 16 அணிகள் பங்குப்பெற்ற இப்போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே முன்னேறியது. அதில் நியூசிலாந்துடன் மோதி வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணியும், இந்தியாவுடன் மோதி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியும் வரும் ஞாயிற்று கிழமை போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில், இறுதி கட்டத்தை எட்டிய இந்த T20 உலகக்கோப்பை போட்டியின் சிறந்த வீரர்கள் என்று பரிந்துரைக்கப்பட்ட 9 வீரர்களின் பட்டியல் , T20 உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் வாக்களித்து வெற்றியாளரை தீர்மானிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அப்பட்டியலில் இங்கிலாந்து அணியை சேர்ந்த சாம் கர்ரன், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் பாக்கிஸ்தானை சேர்ந்த ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, இந்தியாவை சேர்ந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே அணியிலிருந்து சிக்கந்தர் ராசா, இலங்கையைச் சேர்ந்த வனிந்து ஹசரங்கா போன்றோர் இடம்பெற்றுள்னனர்.
நடப்பு T20 உலகக்கோப்பை போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் விராட் கோலி. 4 அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவரது மட்டையில் இருந்து எழும் தீப்பொறி போன்ற ஆட்டம் இந்திய அணி போதுமான ரன்களை குவிப்பதில் தடுமாற்றம் காணும் போதெல்லாம் உதவியது.