சென்னை: அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடு, தந்த கடன் விவரங்களை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழும பங்குகள் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் ஆணையிடப்பட்டுள்ளது. பங்குகளின் விலை சரிவை சந்தித்ததால் பங்கு விற்பனையை அதானி எண்டர்பிரைசஸ் நிறுத்தி வைத்துள்ளது.