ட்ரோன் இறக்குமதி: மத்திய அரசு தடை| Dinamalar

புதுடில்லி : மத்திய அரசு, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளது.கடந்த 2021 ஆகஸ்டில், ட்ரோன் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் ட்ரோன் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்புக்கு ஏற்ப சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம் ட்ரோன் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களை அனுமதியின்றி இறக்குமதி செய்யலாம்.எனினும் அனைத்து … Read more

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஆதியின் 'கிளாப்'

பிரித்வி ஆதித்யா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ஆதி, ஆகன்க்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கிளாப்'. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் … Read more

ரத்த தானம் செய்பவர்களுக்காகப் பாடுவேன் — ஆண்ட்ரியா

சினிமா நட்சத்திரங்கள் பலரும் பலவிதமான சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகளின் பிறந்தநாளில் அவர்களது ரசிகர்கள் ரத்த தானம் செய்வது பல வருடங்களாக நடந்து வருகிறது. அவ்வப்போது நடிகர்களும், நடிகைகளும் அவர்களுடைய ரசிகர்களை தொடர்ந்து சமூக சேவை செய்ய உற்சாகப்படுத்தியும் வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகை ஆண்ட்ரியா ரசிகர்களை ரத்த தானம் செய்ய வேண்டு கோள் விடுத்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில், “இன்று நல்ல செயல் ஒன்று செய்தேன், அது ரத்த தானம். இது சில … Read more

காதலர் தினத்திற்கு பரிசளியுங்கள்… ‛தனிஷ்க் வைர நகைகள்…!| Dinamalar

காதலர் தினம் நெருங்கிவிட்டது. இந்த தருணத்தில் உங்கள் இதயம் படபடக்கும். இந்த நிகழ்வை கொண்டாடும் நேரம் இது. இந்த அன்பை போற்றுங்கள். இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். அவருக்காக என்ன பரிசளிக்கலாம் என யோசிக்கலாம். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைக்கு ஈடு இணையான பரிசு எதுவும் இல்லை. ஆனாலும் அவருக்கு அற்புதமான நகையை பரிசளிக்கலாம். உங்கள் அன்பை அர்த்தமுள்ள பரிசாக கொடுத்தால் அது கொண்டாட்டமாகவும், அது அவருக்கு என்றென்றும் பொக்கிஷமாக … Read more

ஆந்திர முதல்வரை சந்திக்க ஒரே விமானத்தில் பயணித்த நடிகர்கள்

ஆந்திர மாநிலத்தில் கடந்த வருடம் சினிமா டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த அம்மாநில அரசு உத்தரவிட்டது. மிகப் பெரும் பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அவ்வளவு குறைந்த கட்டணத்தை வசூலித்தால் தியேட்டர்காரர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்காது. இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகத்தினர் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். ஆந்திர மாநில மந்திரிகளுடனும் சிலர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் … Read more

3 மாதங்களில் ஒயிட் டாப்பிங் பணி முடியும்!| Dinamalar

பெங்களூரு-பெங்களூரில் சுமுகமான போக்குவரத்துக்காக துவங்கப்பட்ட ‘ஒயிட் டாப்பிங்’ பணிகள், பல இடையூறுகளுக்கு பின், இறுதி கட்டத்தை எட்டியதால், வாகன பயணியர் நிம்மதியடைந்துள்ளனர். எனினும், இன்னும் மூன்று மாதங்களில் தான் பணிகள் முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரின் இருதய பகுதிகள், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், சாலைகள் பள்ளம் ஏற்பட்டிருந்ததால், வாகன பயணியர் அவதிப்பட்டனர். விபத்துகளும் நடந்தன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், 2018ல் ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்கப்பட்டது. இதன்படி, சாலை மீது சிமென்ட் காங்கிரீட் கலவை பூசப்பட்டது.பணிகள் … Read more

முதல் சிங்கிள் மோதலுக்குத் தயாராகும் விஜய், மகேஷ் பாபு ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் விஜய் எந்த அளவுக்கு ரசிகர்களை வைத்திருக்கிறாரோ, அதே அளவிற்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களை வைத்திருப்பவர் மகேஷ்பாபு. இவரது சில படங்களை விஜய் ரீமேக் செய்து வெற்றி பெற்றதால் மகேஷ் பாபு, விஜய் இருவரது இடையிலான ஒப்பீடு அடிக்கடி சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. விஜய், மகேஷ் பாபு ஆகியோரது ரசிகர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இதனிடையே, விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளும், மகேஷ் பாபு நடித்து … Read more

கோவிட்; இந்தியாவில் மேலும் 1.67 லட்சம் பேர் குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.67 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,24,78,060 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,67,882 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை … Read more

ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போகும் தி பவர் ஆப் தி டாக்

திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. விருது போட்டிக்கு தகுதி பெறும் படங்களின் பட்டியலை ஆஸ்கர் விழாக்குழு அறிவித்துள்ளது. பெல்பாஸ்ட், கோடா, டோண்ட் லாக்அப், டிரைவ் மை கார், டியூன், கிங் ரிச்சர்ட், லிகோரியா பீட்சா, நைட்மேர் அலே, தி பவர் ஆப் டாக், வெஸ்ட் சைட் ஸ்டோரி ஆகிய படங்கள் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் தி பவர் ஆப் தி … Read more

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை: புதிய வழிகாட்டுதல்கள்| Dinamalar

புதுடில்லி: மத்திய அரசு திருத்தப்பட்ட கோவிட் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதை நீக்கி, அதற்கு பதிலாக 14 நாட்கள் தொற்று அறிகுறிகள் காணப்படுகிறதா என சுய கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 14 திங்கள் முதல் அமலுக்கு வரும். தொடர்ந்து மாறிவரும் கோவிட் வைரசை கண்காணிக்க வேண்டியது அவசியம். … Read more