ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கை சார்பாக  நிதி இராஜாங்க அமைச்சர் …

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இன்று (02) முதல் எதிர்வரும் (05) ஆம் திகதி வரை ஜே ஜோஜியாவின் தலைநகர் டப்பிலினில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்து கொள்வதற்காக டப்ளின் நகருக்குப் பயணித்தார்.

ஆரம்ப கால  அங்கத்துவ நாடான இலங்கை  ச சந்தர்ப்பங்களில்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கி உள்ள ஆதரவுகளும் ஒத்துழைப்புக்களும் மிகவும் சிறப்பானவை.

இம்மாநாட்டில் இலங்கை நாட்டின் பிரதிநிதியாகத் தமது பங்களிப்புகளை வழங்குவதற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷிஹான் சேமசிங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.