நேபாள மண்ணில் இதுவரை நடந்த கோர விமான விபத்துகள்: கூறப்படும் காரணம்

நேபாளத்தில் ஞாயிறன்று பகல் 72 பேர்களுடன் பயணித்த விமானமானது விபத்தில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை 68 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிபுணர்கள் தரப்பு கருத்து இந்த நிலையில், நேபாளத்தில் விமான விபத்துகள் அதிகம் ஏற்பட காரணம் என்ன என்பது தொடர்பில் நிபுணர்கள் தரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதில், மோசமான பராமரிப்பு, போதிய பயிற்சியின்மை மற்றும் தரம் குறைவு உள்ளிட்ட காரணங்களை பட்டியலிட்டுள்ளனர். @AP மட்டுமின்றி, மிக ஆபத்தான ஓடு தளங்களையும் நேபாளம் கொண்டுள்ளது. மலை முகடுகள் … Read more

பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு: பதவி விலகும் கட்டாயத்தில் லெ கிரேட்

பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர் நோயல் லெ கிரேட் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை தொடர்ந்து, அவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று Le Monde சனிக்கிழமை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு  பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFF) தலைவர் நோயல் லெ கிரேட் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று Le Monde தெரிவித்துள்ளது. பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தணிக்கையின் போது, பல பிரான்ஸ் சர்வதேச வீரர்களின் … Read more

கொடூர முகத்தை மீண்டும் காட்டிய ரஷ்யா: சக்தி வாய்ந்த ஏவுகணை ஏவி உக்ரைனிய நகரம் உருக்குலைப்பு

விமானம் தாங்கி கப்பல்களை மூழ்கடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஆறு டன் எடையுள்ள ஏவுகணைகளை உக்ரைனிய குடியிருப்புகள் மீது  ரஷ்யா ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. கொடூர தாக்குதல் உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் பொதுமக்களின் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து, விமானம் தாங்கி கப்பல்களை அழிக்கக்கூடிய 6 டன் எடையுள்ள ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது. Kh-22 என்றும் அழைக்கப்படும் X-22 ஐப் பயன்படுத்தி இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, மேலும் “கேரியர் கொலையாளிகள்” என்றும் அழைக்கப்படும் இந்த ஆயுதம், பனிப் போரின் போது … Read more

கனடாவில் சாலையில் படுத்திருந்த பெண்ணை கண்ட ஓட்டுனர்! சில நிமிடங்களில் மரணம்

கனடாவில் சாலையில் படுத்தபடி கிடந்த பெண்ணொருவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். மொண்றியலில் தான் இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. அங்குள்ள டிகாரி பவுல்வர்ட் சாலையில் பெண்ணொருவர் சாலையில் படுத்தபடி இருந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்த ஓட்டுனர் 911க்கு தகவல் தெரிவித்த நிலையில் அவசர குழுவினரும், பொலிசாரும் அங்கு வந்தனர். அப்போது 40 வயதான பெண்ணை பரிசோதித்த போது அவர் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக தெரியவந்தது. Stéphane Grégoire/Radio-Canada அப்பெண் பலத்த காயத்துடன் கிடந்தார் … Read more

இலங்கை அணியை கதறவிட்ட இந்திய அணி: வரலாற்று வெற்றியை பதிவு செய்து அசத்தல்

இந்தியா-இலங்கை இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.  பேட்டிங்கில் ஜொலித்த இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை விளையாடுவதற்காக இந்தியாவிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இதில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. ஆரம்பம் முதலே … Read more

15 ஆண்டுகள் பழமையானது! 67 பேர் உயிர் பலிக்கு காரணமான விமானம் குறித்து முக்கிய தகவல்கள்

நேபாளத்தின் பொகாராவில் இருந்து கிளம்பிய விமானம் விபத்துக்குள்ளான நிலையில் குறித்த விமானம் தொடர்பிலான சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த் விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் தற்போது வரையில் 67 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

உங்கள் மகள் இறந்துவிட்டார்! வெளிநாட்டில் இருந்து கணவர் திரும்பியதும் மனைவி குடும்பத்துக்கு வந்த போன்

திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருமணத்திற்கு பின் வெளிநாடு சென்ற கணவர் தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த பிரசாத் (32) என்பவருக்கும் அனிஷா (25) என்ற பெண்ணிற்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பின்னர் பிரசாத் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு, குவைத்துக்கு சென்றார். திருமணத்தின் போது 70 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையில் முதல் தவணையாக … Read more

தரையிறங்கும்போது நெருப்பு கோளமான விமானம்… 30 ஆண்டுகளில் மிக மோசமான துயர சம்பவம்

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 72 பேருடன் தரையிறங்கிய எட்டி ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 64 பேர்கள் வரையில் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறித்த விபத்தில் சிக்கி 64 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @getty காட்மாண்டுவில் இருந்து குறித்த விமானமானது பொக்காரா சென்றதாக தெரிய வந்துள்ளது. விபத்தின் போது விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது. விமானம் ஓடு … Read more

அந்தரத்தில் தடுமாறிய 72 பேர் பயணித்த விமானம்! பலரின் உயிரை காவு வாங்கிய கடைசி நிமிட வீடியோ

நேபாளத்தின் பொகாராவில் 72 பேர் பயணித்த விமானம் தீப்பற்றி எரியும் முன் தடுமாறிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.  தீப்பற்றி விபத்துக்குள்ளானது. நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்ததாக பல … Read more

பெற்றோருடன் விடுமுறை கொண்டாட சென்ற இடத்தில் மூளைச்சாவடைந்த சிறுவன்: நொறுங்க வைக்கும் சம்பவம்

கரீபியன் தீவு நாடான பார்படாஸில் பெற்றோருடன் விடுமுறையை கொண்டாட சென்ற இடத்தில் 8 வயது சிறுவன் மூளைச்சாவடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. உடல் முழுவதும் லேசான தடிப்பு பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனே மூளைச்சாவடைந்த நிலையில் 14ம் திகதி பகல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். கடந்த வாரம் பார்படாஸ் பகுதியில் வைத்து சிறுவன் ஏஸ் Rewtastle என்பவருக்கு திடீரென்று உடல் முழுவதும் லேசான தடிப்பு ஏற்பட்டுள்ளது. Image: Amber Field/Facebook இதனையடுத்து … Read more