கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க்கின் வங்கி உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் பேங்க்..!!

வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் வங்கி வணிகத்தைத் தொடர கேரளாவின் அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க் லிமிடெட்-க்கு ஜனவரி 3, 1987 தேதியிட்டு வழங்கப்பட்டு உள்ள வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க்-ன் வங்கி உரிமத்தை முழுமையாக ரத்து செய்து முடக்காமல் வங்கி அல்லாத நிறுவனமாக அதாவது NBFC ஆக செயல்பட அனுமதித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இனி அடூர் … Read more

சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள்… நாளை திறப்பு விழா..!!

தமிழகத்தில் சென்னை அடுத்த பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த சமந்தாவுக்கு ஆந்திராவில்தான் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் தான் மருமகளும் ஆனார். பின்னர் விவாகரத்து பெற்றாலும் சமந்தாவுக்கு ஆந்திர ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சமந்தாவை அவர்களுக்கு பிடிக்கும்.தற்போது உடல்நல பிரச்சனைகளால் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தாலும் ரசிகர்கள் ஆதரவு அவருக்கு இருந்து கொண்டே தான் உள்ளது இந்த நிலையில் தான் குண்டூர் அடுத்த பாபட்லா மாவட்டத்தில் அலபாடு கிராமத்தைச் … Read more

பைக் சுற்றுப்பயணத்தில் செஃப் ஆக மாறிய நடிகர் அஜித்..!!

நடிகர் அஜித், பைக் ஓட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். கடந்த சில மாதங்களாக அவரது பைக்கில், அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்த அவர், சமீபத்தில் தனது பைக்கிங் பயணத்தை மீண்டும் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது அவர் நேபாளத்தில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக, நேபாளத்தில் அஜித் இருக்கும், பல காட்சிகள் … Read more

தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள்!!

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன. ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு … Read more

அந்தர் பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி!!

அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பிய போது அரசியல் முதிர்ச்சி உள்ள நபர்கள் குறித்து கேளுங்கள் என்று கூறிவிட்டு, தற்போது பாஜகவுடன் எந்த தகராறும் இல்லை என்று கூறி அந்தர் பல்டி அடித்திருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக … Read more

மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்! வைரல் வீடியோ!!

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியிடம் இந்தியில் பேசாதீர்கள், தமிழில் பேசுங்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். இருவரும் மேடையில் நின்று கொண்டிந்த போது, சாய்ரா பானு பேச அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. அப்போது உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம் ‘இந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள்’ எனக் கூறினார். இதனால் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் … Read more

தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி!!

கர்நாடகாவில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடை ஒன்றில் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் … Read more

அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை – ஈபிஎஸ்!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்தார். மேலும் தமிழக … Read more

இது தெரியுமா ? வாட்ஸ்அப்பில் வெளியான புதிய அம்சம்..!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. … Read more

பொன்னியில் செல்வன் – 2 படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை!!

நாளை வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் – 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை வெளியாகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொதுவாக பெரிய ஹீரோக்கள் படம் என்றால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி … Read more