திருடர்களிடமிருந்து பாதுகாப்பாம்.. கதவுக்கு கூட மின் இணைப்பு கொடுத்த மூதாட்டி.. மின்சாரம் தாக்கி பலி

News oi-Mohan S மயிலாடுதுறை: சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து, பாதுகாத்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்கு சரணாலயம் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள், தங்கள் விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து சேதப்படுத்தாத வண்ணம் மின்வேலி மற்றும் மின் தடுப்புகளை வைப்பது வழக்கம். இதனால் இரவு நேரங்களில் ரோந்து பணியில் இருக்கும் வனப் பணியாளா்களுக்கும், … Read more

பதவி பறிபோகும் பயம்.. கூவத்தூர் பாணியை கையில் எடுக்கும் ஹேமந்த்.. 3 பஸ்சில் கிளம்பிய எம்எல்ஏக்கள்!

News oi-Mani Singh S ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தனது கட்சி எம்.எல்.ஏக்களை 3 பேருந்துகளில் அவசரமாக சொகுசு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். கடந்த ஆண்டு இவர் அரசு ஒப்பந்தமான சுரங்க ஒதுக்கீடு ஒன்றை தன் பெயரிலேயே ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தன் பதவியை தவறாக பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் … Read more

பெரிய சிக்கலில் ஜார்கண்ட் அரசு! தாய் அல்லது தாரத்தை முதல்வராக்கும் சோரன்? ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

News oi-Vigneshkumar ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 80 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்குக் கடந்த 2019இல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், அதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இதில் இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளன. ஜார்க்கண்ட் இதுநாள் வரை கூட்டணிக்குள் எவ்வித குழப்பமும் இல்லாமலேயே … Read more

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் 590 பக்க அறிக்கை சமர்ப்பித்தது

India bbc-BBC Tamil Getty Images ஜெயலலிதா ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 590 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. நீதியரசர் ஆறுமுகசாமி நேரில் வந்து அறிக்கையை சமர்ப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆணையத்தின் ஐயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறிய அவர், இரண்டு பிரிவுகளாக பரிந்துரைகள் … Read more

பாகிஸ்தானில் 7 லட்சம் வீடுகளை அடித்துச் சென்ற கனமழை; மேலும் மழை தொடரும் என எச்சரிக்கை

International oi-Halley Karthik இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக இதுவரை நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மக்களை மீட்க அந்நாட்டு அரசு ராணுவ உதவியை கோரியுள்ளது. இந்த பாதிப்புகளால் 1,456 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 982 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த கனமழை மேலும் ஒருவாரத்திற்கு தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் … Read more

யு.யு.லலித்: 74 நாட்களுக்கு இவர்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி – யார் இவர்?

India bbc-BBC Tamil BBC உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி யு.யு.லலித், சனிக்கிழமை காலையில் முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொள்ளவிருக்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ தமது மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இவர் 74 நாட்கள் மட்டுமே இருப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். … Read more

கூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து.. தள்ளாடிய சோனாலி போகத்.. தாங்கி பிடித்தது யார்?.. பகீர் வீடியோ!

India oi-Vishnupriya R கோவா: பாஜக பிரமுகரும் டிக்டாக் புகழ் நடிகையுமான சோனாலி போகத்திற்கு குளிர்பானத்தில் ஏதோ கெமிக்கலை கலந்து கொடுத்ததும் அதை குடித்த சோனாலி தள்ளாடிபடியே செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. Recommended Video ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கடந்த 22 ஆம் தேதி இரவு கோவாவில் பார்ட்டிக்கு சென்ற நிலையில் 23ஆம் தேதி அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பல்வேறு … Read more

”என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன்” ஹேமந்த் சோரன் ஆவேசம்!

India oi-Yogeshwaran Moorthi ராஞ்சி: என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிராக போராடுவேன் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றிருந்தார் ஹேமந்த் … Read more

படுத்தேவிட்டானய்யா.. ஓட்டுக்காக மாணவிகளின் காலில் விழுந்து கெஞ்சிய மாணவர்கள்! கலகல ராஜஸ்தான்

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் இன்று நடந்த பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் ஓட்டுக்கேட்டு மாணவிகளின் காலில் விழுந்து மாணவர்கள் விழுந்து கெஞ்சியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் மட்டும் வந்துவிட்டால் போதும் கோட்டையில் இருக்கும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் செல்வந்தர்கள் வீதிகளில் இறங்கி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடு இன்றி கால்களில் விழுந்து … Read more

கேரளாவில் வானளாவிய கட்டிடங்களை தகர்த்த ‘தமிழ்நாட்டு நிறுவனம்’.. ‘9 நொடிகள்’ – இந்த விஷயம் தெரியுமா?

India oi-Vignesh Selvaraj நொய்டா : நொய்டா சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இடிக்கப்பட உள்ளன. இதேபோலே, 2020ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொச்சி அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது. கொச்சியில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் இதைவிட உயரம் குறைவானவையே. சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப் போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும். இத்தகைய கட்டட இடிப்பு வேலைகள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. உலகம் முழுவதும், விதியை மீறிய கட்டிடங்கள் தகர்த்துத் … Read more