பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வாளர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய 25-ம் தேதி கடைசி நாள்…

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை எழுதிய தேர்வாளர்கள், தங்களது கல்வி சான்றிதழ்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் கால அவகாசம்  வரும் 25-ம் தேதி வரை  நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும், … Read more

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற பட்ஜெட்! கே.எஸ்.அழகிரி…

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற பட்ஜெட் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டி உள்ளார். முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன் என கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்து ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் தவறான நிதி மேலாண்மை யின் காரணமாக, தமிழக அரசின் கடன் சுமை 2021 இல் ரூபாய் 5 லட்சத்து 70 … Read more

அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. முதல்நாள் அமர்வான இன்று தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் 24ந்தேதிவரை மட்டுமே நடைபெறுகிறது. இந்த நிலையில்,  இன்று … Read more

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை? நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பது குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் விளக்கி உள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடங்கி வைத்தார் சபாநாயகர். தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். … Read more

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட் – முழு விவரம்….

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட்  முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதி நிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இடைக்கால நிதி நிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முதன்முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின்  நிதிநிலை அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச்.18) காலை 10 மணிக்கு நிதியமைச்சா் … Read more

இந்தியாவிலேயே முதன்முதலாக வானிலையை கணிக்க ரேடாரை நிறுவுகிறது தமிழகஅரசு! தமிழ்நாடு வெதர்மேன் வரவேற்பு…

சென்னை: இந்தியாவிலேயே முதன்முதலாக வானிலையை கணிக்க தமிழகஅரசு மாநில நிதிகளைக்கொண்டு ரேடார் உள்பட முன்னெச்சரிக்கை கருவிகளை நிறுவ உள்ளது. அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்து பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது. தமிழக அரசின் அறிவிப்புக்கு பிரபல வானியல் ஆய்வு நிபுணர் வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் வரவேற்பு தெரிவித்து உள்ளார். மத்தியஅரசின் வானிலை ஆய்வு மைய குளறுபடி காரணமாக, தமிழ்நாடு வெள்ளம் மற்றும் புயலால் கடுமையான சேதங்களை எதிர்கொள்கிறது. இதற்கு வானிலை ஆய்வு மையத்தில் உள்ள ரேடார் உள்பட … Read more

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி – எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள்….

சென்னை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர், சட்டப்பபேரவையில் இன்று 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில்  துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-  சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி,  மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் … Read more

முதல்வரின் முகவரி -அகரமுதலி-ஐஐடி-என்ஐடியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி….

சென்னை: நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் முகவரி திட்டம், அகரமுதலி திட்டம், ஐஐடி-என்ஐடி போன்ற தேசிய கல்வி நிலையங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு. தமிழ்வழிக்கல்வியை … Read more

பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் பிடிஆர்… வரலாறு காணாத வேகத்தில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக புகழாரம்…

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வரும் அமைச்சர் பிடிஆர், பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் பிடிஆர் வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருவதாக கூறினார். 2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்  சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. . இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் பட்ஜெட்டை காலை 10 மணி முதல் தாக்கல் … Read more

இந்தியாவில் 4 ஆம் அலை கொரோனாவுக்கு வாய்ப்பில்லை : மத்திய அரசு

டில்லி மத்திய அரசின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் 4ஆம் அலை கொரோனா ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  அமைச்சர் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல், தடுப்பூசி திட்டம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச … Read more