கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு

கடலூர்: வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது – கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிந்துள்ள வாக்குகளை எண்ணும் பொது இந்திய்ரத்தின் திரையிடும் பகுதி பழுதின் காரணமாக மேற்படி கட்டுபாட்டுக் கருவியினை பெல் நிறுவனத்தை சார்ந்த பொறியாளர்கள் பழுது பார்த்தும் குறைவினை … Read more

முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள, அவரது வரலாற்று நுாலான, ‘உங்களில் ஒருவன் பாகம் ௧’ நுால் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை சோனியாவிடம் வழங்கினார். விழாவுக்கு வருமாறு, முதல்வர் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.

3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னை: 3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – 3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் கட்சி. 73 மாநகராட்சி, 151 நகராட்சி, 368 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வாக்களித்த மக்களுக்கு எங்களது நன்றிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 61,469 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,40,22,749 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.   இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் இருவர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,989 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,375 பேர் குணம் … Read more

அதிமுக மாவட்ட மகளிரணி தலைவியைத் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர்

கமுதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அதிமுக மகளிர் அணி தலைவியைத் தோற்கடித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பேரூராட்சியில் இரண்டாவது வார்டில் அதிமுக மாவட்ட மகளிரணி தலைவியான வழிவிட்டாள் என்பவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மகாலட்சுமி ராஜசேகர் 159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமி ராஜசேகர் ”இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையைத் … Read more

திமுக வசமானது காஞ்சிபுரம்: மாவட்டத்தின் 3 பேரூராட்சிகளிலும் திமுக அமோகம்…

காஞ்சிபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்  ஆகிய 3 பேரூராட்சிகளிலும் திமுகவே அதிகமான இடங்களில் வெற்றி பெற்று வசப்படுத்திஉள்ளது. தமிழ்நாடு முழுவதும பிப்ரவரி 19ந்தேதி தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி,  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும 268  மையங்களில்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜாபாத், … Read more

திமுக வசமானது திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகள்… கொங்குமண்டலத்திலும் அதிமுகவை வீழ்த்தி முன்னிலை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாநகராட்சியை திமுக கூட்டணி  கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மற்ற மாநகராட்சிகளை யும் கைப்பற்றும் சூழல் எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்திலும் அதிமுகவை வீழ்த்தி திமுகவை முன்னிலையில் உள்ளது. தமிழழ்நாட்டில்  கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, அனைத்து இடங்களிலும் பெரும்பாலாக திமுக கூட்டணி கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன. தமிழ்நாட்டில் … Read more

முதல்முறையாக குமரி கப்பியறை பேரூராட்சியை கைப்பற்றியது திமுக, இரணியல் மண்டைக்காடை கைப்பற்றியது பாஜக…

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக குமரி பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. அதே வேளையில் குமரி மாவட்டம் இரணியல் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான  வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற்று முடிவடைந் தது. இதையடுத்து, இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும 268  … Read more

முன்ளாள் முதல்வர் ‘எடப்பாடி’ பழனிச்சாமி தொகுதியில் திமுக முன்னிலை….

சேலம்: முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரு எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியிலேயே அதிமுகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.  எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சேலம் மாநகராட்சியில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவு கடந்த 18ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் வாக்கு எண்ணிக்கை … Read more

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் பரபரப்பு! இது கடலூர் சம்பவம்….

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் வாக்கு எண்ணிக்கை மையத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு. கட்சியினரும் குவிந்தனர். இதையடுத்து, அந்த அறையியூன் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் எடுக்கப்பட்டன. இதனால், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதமானது. கடலூர் மாநகராட்சியில் ஒரு தனியார் பள்ளியில்ரு தனியார் பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்போது பதிவான வாக்குகள் கொண்ட  மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த … Read more