வெடித்து சிதறத் தொடங்கியது அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பை கக்கி வருகிறது. உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும். 2019ம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தபோது, ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்தன. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்து சிதறியது. அதன்பிறகு சீற்றம் தணிந்து காணப்பட்ட எரிமலை மீண்டும் தற்போது வெடித்து சிதறி வருகிறது. இதனால் எரிமலை இருக்கும் பகுதி தீப்பிழம்பாக காட்சியளிக்கிறது. Source link

வனப்பகுதியில் பெண் மர்ம மரண வழக்கில் சிறுவன் கைது… இளம்பெண் வேறொருவரைக் காதலித்ததால் வெறிச்செயல்..!

தருமபுரி அருகே வனப்பகுதியில் இளம்பெண் மர்ம மரண வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரியைச் சேர்ந்த 23 வயதுடைய பி.பார்ம் பட்டதாரியான ஹர்ஷா என்பவர் அதியமான்கோட்டை அருகே வனப்பகுதியில் துப்பட்டாவால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஹர்ஷாவுக்கும், சிறுவனுக்கும் வயதுக்கு மீறிய … Read more

ஊரார் பணத்தை ஏமாற்றியதால் ஆத்திரம்…. மரத்தில் கட்டிவைத்து உரித்த சம்பவம்…!

அரக்கோணம் அருகே ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நெமிலி பிரிவு மேனேஜரைத் தேடி வந்த முதலீட்டாளர்கள், நள்ளிரவில் அவரது சகோதரரை மரத்தில் கட்டி வைத்து, தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதற்கு ஆசைப்பட்ட மக்களிடம் லட்ச ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி கோடிகளை சுருட்டியவரை கட்டிவைத்து ஊர் கூடி உரித்து எடுத்த காட்சிகள் தான் இவை..! இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்துள்ளது சயனபுரம் … Read more

ஆருத்ரா நிதி நிறுவன முகவராக இருந்தவர் வீடு நள்ளிரவில் முற்றுகை.. முகவரின் சகோதரரை மரத்தில் கட்டி வைப்பு..!

நெமிலி அருகே ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் வீட்டை நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு முற்றுகையிட்டனர். நெமிலியில் கடந்த ஒராண்டுக்கு முன் துவக்கப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் மேலாளராக இருந்தவர் யோகானந்தம். அவரது வீட்டை நேற்றிரவு 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அவர்கள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் கதவு கண்ணாடி, மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. முகவர் யோகானந்தத்தின் சகோதரர் சதிஷ் குமார் என்பவரையும் சிலர் மரத்தில் கட்டிப்போட்டனர். இது பற்றி அறிந்து சம்பவ … Read more

220 மில்லியன் டாலருக்கு ரூஸ்வெல்ட் ஓட்டலை குத்தகைக்கு விட்டது பாகிஸ்தான்

அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 100 ஆண்டுகள் பழமையான, ஆயிரத்து 250 அறைகள் கொண்ட ஓட்டல், 220 மில்லியன் டாலருக்கு குத்தகை விடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் அரசுக்கு ஆயிரத்து 817 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், 3 ஆண்டுகள் … Read more

16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை எவ்வித சேர்க்கையும் இன்றி 10-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது

அமெரிக்காவில் உயிரியல் பூங்கா ஒன்றில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பராமரிக்கப்பட்டுவந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி 10-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை பார்த்தீனோஜெனிசிஸ் அல்லது “கன்னி பிறப்பு” என்று அழைக்கப்படுகிறது. ராஜ நாகம், வேளா மீன், கலிஃபோர்னியா காண்டோர் கழுகுகள் போன்றவற்றில் பார்த்தீனோஜெனிசிஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தாலும், முதலை இனங்களில் முதல் கன்னி பிறப்பு இதுதான் என பயாலஜி லெட்டர்ஸ் இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கன்னிப் பிறப்பு தன்மை … Read more

மேடத்துக்கு.. ப்ரீயா பிரட் ஆம்லெட் தரமாட்டியா..? ஓனர்… ஸ்டேசனுக்கு வாப்பா..! ‘கமர்கட்டு’ களவாண்ட காட்சிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடைக்குள் புகுந்த பெண் காவலர்கள் ஓசியில் பிரட் ஆம்லேட் கேட்டு கடை ஊழியருடன் தகராறு செய்ததுடன், கடையில் கமர் கட்டு மிட்டாய்களை களவாண்ட புகாரில் சிக்கியதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். ஜூஸ் கடைக்குள் புகுந்து தட்டில் உள்ள கமர் கட்டு மிட்டாய்களை கொத்தாக அள்ளும் இவர்தான் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி..! காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் மப்டியில் நுழைந்த காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான … Read more

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வெட்டிக் கொலை – இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரை கட்டையால் தாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான சுப்பிரமணி என்பவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டின் வாசலில் உறங்கிய போது மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், சுப்பிரமணியை கொன்றதை போலீசார் கண்டுபிடித்தனர். மது பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார், சுப்பிரமணி உறங்கும் … Read more

நெல்லையில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இளைஞர் வெட்டிக்கொலை – 4 பேர் கைது

நெல்லையில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இளைஞர் ஒருவரை வெட்டிக் கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கொலை  குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் நெல்லை கே டி சி நகரைச் சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பதும், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துஹரி என்பவரை கொலை செய்த வழக்கின் முக்கிய … Read more

உக்ரைன் அணை மீது தாக்குதல் : வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்

உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள அணை தகர்க்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் அமைந்துள்ள கக்கோவ்கா அணையை உக்ரைன் படைகள் தகர்த்ததாக ரஷ்யாவும், ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததாக உக்ரைனும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன. அணையில் இருந்து வெளியேறிய பல மில்லியன் கன அடி தண்ணீரால் 24 கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரப்பர் படகுகள் மற்றும் தண்ணீரில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் … Read more