பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ மீது வழக்கு

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த வாரம் 17 வயது சிறுமியை காரில் 5 பேர் கொண்ட குடும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக எம்.எல்.ஏ. ரகுநந்தன் … Read more

"ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி, மனுதர்மம்!" – அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி, மனுதர்மம்! என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “எந்த விதமான பிரச்னை இல்லையென்றால் ஆய்வு செய்ய வருபவர்களுக்கு ஒத்துழைப்பது தான் நீதி! மனுநீதி, மனுதர்மம்! அந்த வகையில் தீட்சிதர்களுக்கு வைக்கின்ற அன்பாக கோரிக்கை உங்கள் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை எடுக்க வேண்டும் என்பது எங்கள் … Read more

வேற்று சாதிக்காரருடன் திருமணம்! மாப்பிள்ளையைச் சுட்டுக் கொன்ற மாமனார்

பீகார் மாநிலத்தில் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக மகள் வேற்று சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், ஆத்திரமடைந்த தந்தை பட்டப்பகலில் சலூனில் மாப்பிள்ளையை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள தும்ராவ்ன் கிராமத்தில் வசித்து வருபவர் சுனில் பதக். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரது மகள் அதே ஊரைச் சேர்ந்த உள்ளூர் நகராட்சி கவுன்சிலர் சோனு ராயின் சகோதரர் மோனு ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து … Read more

'விக்ரம்' பட வெற்றி.. லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசு வழங்கிய கமல்ஹாசன்

‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 2022-ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படத்தில் … Read more

காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் காவலருக்கு சக காவலர்கள் நடத்திய வளைகாப்பு விழா!

நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலருக்கு சக கவாலர்கள் வளைகாப்பு நடத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் செட்டிகுளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து காவலர் திவ்யா கர்ப்பம் அடைந்த நிலையில், ராதாபுரம் காவல் நிலையத்தில் இருந்து பணகுடி … Read more

காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைக்கும் புதிய தீவிரவாத அமைப்பு: திடுக்கிடும் தகவல்

காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற பல படுகொலைகள் “காஷ்மீர் சுதந்திர போராளிகள்” என்கிற புதிய அமைப்பால் அரங்கேற்றப்பட்டவை என காஷ்மீர் போலீஸ் தகவல் அளித்துள்ளது. லஸ்கர், ஜெய்ஷ் போல அல்லாமல், ‘காஷ்மீர் சுதந்திர போராளிகள்’ அமைப்பின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருப்பதால், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலை படைகளை போல இல்லாமல், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கிகளை பயன்படுத்தி மிகவும் அருகிலிருந்து சுட்டு பலர் … Read more

’யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம்’ – இளைஞர் தற்கொலை.. விசாரணையில் திடீர் திருப்பம்

கரூரில் மேல்படிப்பு படிக்க முயற்சித்து வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் (20). இவர் கேட்டரிங் படிப்பை இடைநிறுத்தி விட்டு அவ்வப்போது கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோர் வேலைக்கு போகச்சொல்லி திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து … Read more

ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: புதுக்கோட்டையை சேர்ந்தவர் கைது

ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த நபர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் வசிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்அப் குரூப்பில் இணைவதற்கான லிங்க், தெரியாத அலைபேசி எண்ணில் இருந்து கிடைத்துள்ளதாகவும், இதில் ஒரு கும்பல் கர்நாடகாவில் 4 இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தில் 2  இடங்களிலும் குண்டு வைக்க போவதாக உத்தரப் பிரதேச காவல்துறை தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு  தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து எம்.ஏ.எஸ். 325/22, பிரிவு 507 மற்றும் 66 (F) … Read more

தம்பதிகளாய் இணைந்து உங்களை சந்திப்போம்- திருமண அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம், வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வருகிற 11 ஆம் தேதி தம்பதியாய் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரது ஆசிர்வாதமும் தேவை என குறிப்பிட்டுள்ளார். என் வாழ்க்கையின் காதல் நயன்தாரா என தெரிவித்த விக்னேஷ் சிவன், 9 ஆம் தேதி திருமணத்திற்கு பின் புகைப்படங்களை பகிர்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் உறவினர், … Read more

’தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பணி நிரந்தரம் செய்க’ – போராடிய செவிலியர்கள் கைது!

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்திய, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனை வளாகத்தில் திடீரென திரண்டு தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். சிறிது நேரத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக ஏறக்குறைய … Read more